நீ இமைக்க மறக்கும் போதெல்லாம்
நான் சுவாசிக்க மறந்து போகிறேன்!
கரைந்து போன காலடித் தடங்களும்... கலையாத நினைவுகளும்..... நொடிப்பொழுதும் மறக்காமல் நினைவூட்டிச் செல்லும் அலைகளும்....
10 September, 2009
எது அழகு?
எது அழகு?
நெற்றித் திருநீற்று படகினிலே;
வட்டக் குங்குமம் பொட்டழகு!
வெட்கப்படுகையிலே உன்
கட்டைவிரல் கோலம் அழகு!
சாலையைக் கடக்கையில்
எதார்த்தமாய் தொடுவது போல்,
நிஜமாய் தொட்ட உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!
என் கன்னக் குழி மறைக்க,
நீ தருவதாய் சொன்ன
உன் கன்னம் ஓர் அழகு
காதலுக்கு அழகு காத்திருப்பதுதான்;
ஆனாலும்
எனை காக்க வைத்துவிட்டு,
கல்லறையில் உறங்குவது - உனக்கு
எந்த வகையில் அழகு?
நெற்றித் திருநீற்று படகினிலே;
வட்டக் குங்குமம் பொட்டழகு!
வெட்கப்படுகையிலே உன்
கட்டைவிரல் கோலம் அழகு!
சாலையைக் கடக்கையில்
எதார்த்தமாய் தொடுவது போல்,
நிஜமாய் தொட்ட உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!
என் கன்னக் குழி மறைக்க,
நீ தருவதாய் சொன்ன
உன் கன்னம் ஓர் அழகு
காதலுக்கு அழகு காத்திருப்பதுதான்;
ஆனாலும்
எனை காக்க வைத்துவிட்டு,
கல்லறையில் உறங்குவது - உனக்கு
எந்த வகையில் அழகு?
Subscribe to:
Posts (Atom)