31 August, 2009

அவளுக்குப் பிடித்தது

என்னிடம் உள்ள எல்லாமும்
பிடிக்கும் என்றாள்

என் உயிரைக் கூட என்பதை
உணர்ந்தேன்,
அவள் திருமண சேதியை கேட்டபோது.

உன் குரல்

அழைப்பது யாராக இருந்தாலும்,
கேட்பது - உன் குரலாகவே உணர்கிறேன்!
என்ன செய்தாயடி
என்னை?

மல்லிகை

ஐந்து ரூபாய் நாணயங்களை
உண்டியல் போட்டேன்;
அவள் கூந்தலில் மல்லிகையாய்!
Related Posts Plugin for WordPress, Blogger...