'H' முத்திரை மீண்டும் தேவை!
இரண்டு ரூபாய் அரிசி, உண்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டுமா அல்லது குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமா? பொதுப்படையாகப் பார்த்தால் குடும்பஅட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த இரண்டு ரூபாய் அரிசி ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்படும் அரிசியினை எத்தனை குடும்பத்தினர் வாங்குகின்றனர் என்று பா ர்க்கவேண்டும். உண்மையிலே வாங்காதவர்களின் அரிசி கள்ளமார்க்கெட் பக்கம் ஒதுங்க வாய்ப்புள்ளது.
நியாயவிலைக்ககடைகளின், இத்தகைய செயல்பாடுகளைத் தவிர்க்கத்தான் முந்தைய அரசு 'ஹெச்' முத்திரை மாதிரி சமாச்சாரமெல்லாம் கொண்டுவந்தது.
'ஹெச்' முத்திரை கட்டாயமாக்கப்படவேண்டிய ஒன்று. வேண்டுமானால் வருமானவரம்பினை மாற்றி யமைத்துக்கொள்ளலாம்.