நியாயமா?
=========
நெற்றி திருநீற்று படகினிலேவீற்றிருக்கும்
வட்டக் குங்குமம்; பொட்டழகு!
வெட்கப்படுகையிலே - உன்
கட்டைவிரல் கோலம் அழகு!
சாலையைக் கடக்கையில்,
எதேச்சையாய் தொடுவது போல் -
நிஜமாய் தொட்ட - உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!
என்கன்னக் குழிமறைக்க நீ
தருவதாய்ச் சொன்ன -உன் கன்னம்; ஓர் அழகு!
காதலுக்கு அழகு காத்திருப்பது தான்!
என்னை காக்க வைத்துவிட்டு
கல்லறையில் நீ உறங்குவது -- எந்த வகையில் அழகு?
12 comments:
கவிதைக்கு :) உங்க காதலிக்கு :(
காதல் பட்ட பாவத்தால், காயப்பட்ட இதயங்களே, கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
அட பொன்னான மனசே, பூவான மனசே வக்காத பொண்ணுமேல ஆச, நீ வக்காத பொண்ணுமேல ஆச....
கல்லரைக்கு போனவங்களுக்காக எல்லாம் காத்திருக்காதீங்க..
தங்கள் கருத்துக்கு நன்றி கவிதா.
காத்திருத்தல் கூட ஒரு சுகம் தானே!
:(
//காதல் பட்ட பாவத்தால், காயப்பட்ட இதயங்களே, கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
கண்ணீரை மருந்தாக்குங்களேன்.
கண்ணீரை மருந்தாக்குங்களேன்//
அட! இந்தப் பாட்டை வேற நினைவு படுத்திட்டீங்களா?
:((
நாகு, கவிதை இனிமை.காதல் சோகம்.
கல்லறை காக்கப்படலாம்,
காதலும் காக்க படலாம்,
வெளியில் வந்து சொல்வது
உங்களைக் காக்கும்
அன்புடன்.
சிபி, வள்ளி தங்கள் வருகைக்கு நன்றி
காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்
கட்டபொம்மன் பேருந்து வரை :)
// காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்
கட்டபொம்மன் பேருந்து வரை :) //
நிலவு நண்பரே,
ரொம்ப அனுபவிச்சு சொல்றாப்ள இருக்கு!
//என்கன்னக் குழிமறைக்க நீ
தருவதாய்ச் சொன்ன -உன் கன்னம்; ஓர் அழகு!//
:))
காத்திருத்தல் -> காத்தல் -> காதல்???
//காத்திருத்தல் -> காத்தல் -> காதல்???//
ஆம், சுகமான சுமை!!
Post a Comment