26 April, 2006

கவிதை--நியாயமா?

நியாயமா?
=========

நெற்றி திருநீற்று படகினிலேவீற்றிருக்கும்
வட்டக் குங்குமம்; பொட்டழகு!

வெட்கப்படுகையிலே - உன்
கட்டைவிரல் கோலம் அழகு!

சாலையைக் கடக்கையில்,
எதேச்சையாய் தொடுவது போல் -
நிஜமாய் தொட்ட - உன்
சுட்டுவிரல் ஸ்பரிசம் அழகு!

என்கன்னக் குழிமறைக்க நீ
தருவதாய்ச் சொன்ன -உன் கன்னம்; ஓர் அழகு!

காதலுக்கு அழகு காத்திருப்பது தான்!
என்னை காக்க வைத்துவிட்டு
கல்லறையில் நீ உறங்குவது -- எந்த வகையில் அழகு?
Related Posts Plugin for WordPress, Blogger...