"அவருக்கு சினிமான்னா சுத்தமா
பிடிக்காது மாமி"
இது
எதிர் வீட்டு மாமியிடம் என் மனைவி.
நான்
திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி
வருடங்கள் பல உருண்டோடி விட்டன,
நாம் பார்த்த படமே
எனக்கு கடைசிப் படமாக இருக்கட்டுமே-
இது நான்!
நான் என்று கூறியதில்
நீயும் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பில்
இன்னமும் நான்!
4 comments:
காதல் தோல்வியின் வேதனையா?
அண்ணே நாமளும் ராம்நாட்காரந்தான்
நுண்ணிய கருத்து கொண்டதாக இருந்தது நல்ல கவிதை.பாராட்டுக்கள்
nalla kavithai... vasithu mudinthathum oru sogam varugurathu... valthukal nanba
//நான் என்று கூறியதில்
நீயும் ஒளிந்து கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பில்
இன்னமும் நான்!//
இரசித்த வரிகள்! அருமை !!
Post a Comment