பேச்சு
--------
யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.
யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.
தவிப்பு
--------
தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!!
எழுதியவர் : ஏக்நாத்
கண்டெடுத்தது குங்குமம் dated 18.02.2007
1 comment:
தம்பி,
பதிவு எழுதினா மட்டும் போதாது. தமிழ்மணத்தில் அளிக்க வேண்டும்.
எனக்கும் சொல்லிகொடுத்தா என்ன? எப்படி தேன்கூட்டுல சேக்குறதுன்னு?
கவிதை நல்லா இருக்கு.
Post a Comment