12 February, 2007

கிறுக்கல்கள்!!

நீ
==

என்னிடம் எதுவுமில்லை
உன்னிடம் தருவதற்கு
சாரி......
எல்லாமுமாய் நீயாயிருப்பதால்.


நீ
==

யோசிப்பதற்கு எதுவுமில்லை
என்னுள்
எங்கும் நீயிருப்பதால்!!


சுகம்!!
=====

இருவிழிச் சிறையில்
ஒருவனை வதைப்பதில்
இவளுக்கு ஏனோ....
இத்தனை சுகம்!!

நான் ரசித்த கவிதைகள்

பேச்சு
--------


யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.

யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.


தவிப்பு
--------

தெரிந்தோ தெரியாமலோ
நடந்துவிடுகிற எல்லா சந்திப்புகளிலும்
தெரிந்தே சாகிறது தவிப்பு!!


எழுதியவர் : ஏக்நாத்
கண்டெடுத்தது குங்குமம் dated 18.02.2007
Related Posts Plugin for WordPress, Blogger...